தொடர்புடைய செய்திகள்
- இந்த பொங்கலை சமத்துவமாக கொண்டாடுவோம்! – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
- கூட்டணி வேணும்னா இடஒதுக்கீடு வேணும்! பாமக – அதிமுக இன்று பேச்சுவார்த்தை!
- தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி;
- நாங்க கூட்டணி அமைச்சாதான் ஆட்சி.. நாங்க ராசியான கட்சி! – பிரேமலதா விஜயகாந்த்!
- தை பிறந்தாலும்.. எது பிறந்தாலும்.. திமுகவுக்கு வழி பிறக்காது! – அமைச்சர் உதயகுமார் கலாய்!
இப்பவும் வரமாட்டேன்.. எப்பவும் வரமாட்டேன்.. தொல்லை பண்ணாதீங்க! – ரஜினி வேண்டுகோள்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நேற்று போராட்டம் நடத்தியது குறித்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நல கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “நான் அரசியலுக்கு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடந்த போராட்டம் வேதனை தருகிறது. அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறி என்னை யாரும் வருத்ததிற்கு உள்ளாக்க வேண்டாம். எனது முடிவையும் அதுகுறித்த விளக்கத்தையும் ஏற்கனவே அளித்துவிட்டேன். எனினும் எந்த பிரச்சினையும் இன்றி கட்டுக்கோப்பாக போராடிய ரசிகர்களுக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
