1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Alert for Chennai and Nearby Districts

இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை எச்சரிக்கை..!

Rain
இன்று மதியம் ஒரு மணி வரை சென்னை உள்பட மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறிய பின்னர் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
இந்த நிலையில், மழை குறித்த விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் மதியம் வரை எந்தெந்த மாவட்டங்களில் என்ற விவரத்தை  அறிவித்தது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை நீடிக்கும் என்பது இந்த வானிலை அறிவிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
200 மெகாபிக்சல் கேமரா.. ஆண்ட்ராய்டு 15.. இன்னும் பல..! அசத்தும் சிறப்பம்சங்களுடன் வெளியான Vivo X200 5G!