1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:51 IST)

சுஜித்திற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல், ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல்

சுஜித் ஆழ்துளை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து அவனது உடல் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் மரணம் குறித்து பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சுஜித் மரணம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்த இரங்கல் செய்தியில், சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. சுஜித்தின் பெற்றோர் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சுஜித்தின் மரணத்திற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி, “குழந்தை சுஜித் உயிரிழந்ததை குறித்து மிகவும் வருந்துகிறேன், அவனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்துகொள்கிறேன்” என கூறியுள்ளார். சுஜித்தின் மரணத்திற்கு தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.