தொடர்புடைய செய்திகள்
- பிரபல நடிகை தற்கொலை... சிசிடிவி வீடியோ வெளியீடு! ரசிகர்கள் அதிர்ச்சி
- வாய்தா பட கதாநாயகி தீபா தற்கொலை
- குளியலறையில் கேமரா.. விடுதி மாணவி பரப்பிய வீடியோ! – மாணவிகள் தற்கொலை முயற்சி?
- திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை
- ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து தற்கொலை: இரண்டு தோழிகளின் பரிதாப முடிவு!
பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை....
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பிளஸ்1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஆசிரியர் கொடுத்த பள்ளி பாடங்களை சரியாகப் படிக்ககவில்லை என்பதால், அவரை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி, தன் வீட்டிற்குப் பள்ளிக்குச் செல்வதுபோல் கிளம்பிவிட்டி,பின் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வந்து, துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மாணவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியை அடைந்தனர். பின்னர், போலிஸில் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
