தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்!
- நாளை முதல் தீபாவளி முன்பதிவு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
- வழக்கம்போல ரிசல்ட்டில் மாஸ் காட்டும் மாணவிகள்! – 10, +2 தேர்வு முடிவுகள்!
- இந்த ஆண்டும் பாடங்கள் குறைப்பா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
- மருத்துவ மேற்படிப்பில் சிறப்பு கலந்தாய்வு; வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இடஒதுக்கீடு கட்டாயம்! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை போல மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மாநில அரசின் 69% இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. தற்போது மாநில அரசின் இந்த இடஒதுக்கீடு சதவீதம் மெட்ரிக்குலேசன் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவில் 31%, SC – 18%, ST – 1%, MBC – 20%, BCM – 3.5%, BC – 26.5% ஆகிய விகிதத்தில் இடஒதுக்கீடு அமைய வேண்டும். பொதுப்பிரிவினரில் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி 31% இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
