தொடர்புடைய செய்திகள்
- செப்-26 முதல் 14 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
- நீட் தேர்வு; அரசு பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சியா? – பள்ளிக்கல்வித்துறை ரிப்போர்ட்!
- இந்தியா முழுவதிலும் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - பிரதமர் மோடி
- அரசு பள்ளிகளில் சினிமா திரையிடல்; வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு! – பள்ளிக்கல்வித்துறை!
- '' பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்'' ! தமிழக அரசு அரசாணை வெளியீடு
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு கிடையாது… ஆனா உண்டு!? – பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் தற்போது பள்ளி அளவில் தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சமயத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. எனினும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க தேர்வு அவசியம் என்ற கோரிக்கைகளும் இந்து வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாவட்ட வாரியாக தனித்தனியாக காலாண்டு தேர்வுகளை நடத்த தற்போது பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரித்தபோது லீக் ஆனதால் இந்த முறை பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
