1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. no extra price for tasmac wine shops

பாட்டிலுக்கு 10 ரூபா வாங்கினா நடவடிக்கை!.. விஜய் போட்ட உத்தரவு!. மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!..

tasmac
தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முடக்கும் நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைகளை மூடுவது என அவரின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

கோவில், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டார். இதை பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில், டாஸ்மாக்கில் மாதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எனவும், தடுக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த பல வருடங்களாகவே டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்தான் முதல்வர் விஜய் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.