1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chief minister vijay asked to close tasmac shops

717 டாஸ்மாக் கடைகளை மூடுங்க!.. விஜய் அதிரடி உத்தரவு!...

vijay
தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு நிர்வாகத்திற்கு மாற்றி டாஸ்மாக் என்கிற நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தார். டாஸ்மாக் வழியாக அரசுக்கு நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. அதேநேரம் மதுபான கடைகள் திறந்திருப்பதால் அதிகளவுக்கு மதுபானங்களை குடிக்கும் பழக்கம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது.

15 வயது சிறுவர்களிடம் கூட மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.  மது போதையில் இளைஞர்கள் பல குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே மதுபான கடைகளை மூடுமாறு சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் எந்த அரசும் அதை செய்வதில்லை. இந்நிலையில், புதிதாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்..

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டு தளங்கள், கல்வி நிலையங்கள் அருகேயுள்ள மதுபான கடைகள் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரமுள்ள சில்லரை மதுபான கடைகளை இன்னும் 2 வாரங்களில் மூடுமாறு விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இதை சமூக ஆர்வலர்களும், பெண்களும் வரவேற்றுள்ளனர்.
About Writer
பாலகிருஷ்ணன்