1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:57 IST)

நீலகிரியை அச்சுறுத்தும் புலி; யாரும் வெளியே வராதீங்க! – ஆட்சியர் உத்தரவு

நீலகிரியில் காட்டுப்புலியின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ள நிலையில் புலியை பிடிக்கும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டுப்புலி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் ஊருக்குள் புலி அட்டகாசம் செய்து வருவதால் அதை பிடிக்க வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா புலியை பிடிக்கும் வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தேவையான உணவை வீடுகளுக்கே கொண்டு வந்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் புலி பிடிபடும் வரையில் பேருந்து சேவையையும் நிறுத்தி வைக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.