1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. IAF Lieutenant arrested in Coimbatore

விமானப்படை பெண் அதிகாரி வன்கொடுமை; லெப்டினெண்ட் கைது! – கோவையில் பரபரப்பு!

Tamilnadu
கோவையில் விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படை சேவைக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் கோவையிலும் ஒரு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் பணிபுரிந்த பெண் அதிகாரி அங்கிருந்த லெப்டினெண்ட் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் லெப்டினெனட் அமிர்தேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் விமானப்படை அதிகாரியை கைது செய்ய போலீஸுக்கு அதிகாரம் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதால் லெப்டினெண்டை ஒருநாள் ரிமாண்டில் வைத்திருக்க கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அவங்களுக்கு வேலை.. எங்களுக்கு வெயிட்டிங் லிஸ்டா? – சு.வெங்கடேசன் கண்டனம்!