1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. new wheat beer will be introduced soon

தமிழ்நாட்டில் அறிமுகமாகும் கோதுமை பீர்: விலை என்ன தெரியுமா?

Beer
தமிழகத்தில் ஏற்கனவே பல வகையான பீர்கள் டாஸ்மாக் மது கடைகளில் விற்பனை ஆக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோதுமை பீர் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
டாஸ்மாக் மது கடைகளில் தற்போது 35 வகையான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 100% கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பீர் 160 முதல் 170 ரூபாய் வரையில் விற்பனையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
கோதுமையில்   ஐந்து வகையான புதிய பீர்கள் தயார் செய்து விற்பனை செய்ய டாஸ்மார்க் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய வகை பீர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் பீர்கள் தட்டுப்பாடு இல்லாமல் அனைத்து கடைகளுக்கும் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த தகவல் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ள நிலையில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில்,  கோதுமை பீர் அறிமுகமானால் விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நிதிஷ் குமாரின் கட்சி நிர்வாகி மர்ம கும்பலால் சுட்டுக்கொலை.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!