நயினார் நாகேந்திரன் கமெண்ட்!.. திரிஷா அமைதியாக இருப்பது ஏன்?.. நெட்டிசன்கள் கேள்வி..
trisha
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் மேடைகளில் பேசும்போது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்லி வருகிறார். நேற்று சேலத்தில் பேசியபோது
நாங்கள் ஆட்சியில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே பேசுவோம்.. மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கட்சிகளை நாங்கள் ஏன் பேச வேண்டும்? என்று கூறினார். அவர் அதிமுக பாஜக என்கிற பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் மறைமுகமாக அவர் குறிப்பிடுவது அந்த கட்சிகளை தான்..
விஜயை திரிஷாவுடன் இணைத்து அவர் பேசியதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.. தனிப்பட்ட ஒருவரை, அரசியல் இல்லாத ஒருவரை பற்றி இப்படி பேசக்கூடாது என்று டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் சொல்லி வருகிறார்கள்..
விஜயின் லியோ படம் வெளியான போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் மன்சூர் அலிகானை திட்டி பதிவிட்டார். மேலும், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்றெல்லாம் மிரட்டினார்..
