1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (12:58 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நெல்லை பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லையை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை என்ற பகுதியி உள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்
 
தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயகுமார் என்பவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பள்ளி தலைமை ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.