தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சரிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வேன்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
- பள்ளிப் பாடங்கள் மீண்டும் குறைக்கப்படுகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
- சிபிஎஸ் இ - பள்ளிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
- தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள்!
- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் - அன்பில் மகேஷ்
பாலியல் விழிப்புணர்வு குறித்து பாடங்கள் - அன்பில் மகேஷ்
பாலியல் விழிப்புணர்வு குறித்து பாடங்கள் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
கடந்த சில காலமாக தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் மற்றும் அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமீபத்திய பேட்டியில், பாடப்புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு குறித்து 2 அல்லது 3 பக்கங்களில் பாடங்கள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.
தற்போதைய சூழலில் அதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை குட் டச், பேட் டச் என்னவென்று தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் கொண்டு வந்தால் பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளை இன்னும் தைரியமாக, நம்பிக்கையோடு பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
