1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister subramanian says about dengu fever

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 1,500 பேர் பாதிக்கப்படலாம்: அமைச்சர் தகவல்

டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு என  அமைச்சர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
 
உலக விபத்து தினத்தை முன்னிட்டு சென்னை சட்டக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அக்.11 முதல் 31-ம் தேதி வரை மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
 
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 5,356 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 531 பேர் உள்ளனர். 5 பேர்உயிரிழந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பரில் 1,000 முதல் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தால், விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் சரிபாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவேயில்லை! – சாலை மறியல் செய்த பெண்கள்!