1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (16:02 IST)

செய்த துரோகம் தந்த பரிசு... அதிமுகவை சாடிய கருணாஸ்!

துரோகம் செய்தோர் தோல்வியையைத் தான் சந்திப்பர் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
 
இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சிலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். நேற்று இரண்டு அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த நிலையில் இன்றும் ஒருவர் திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
துரோகம் செய்தோர் தோல்வியையைத் தான் சந்திப்பர் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டணியே உடைத்து சுக்குநூறாக்கும் என அவர் குறிப்பிட்டார்.