1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Implementation of E-Pass System for Vehicles in Nilgiris Starting from April 1

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நீலகிரி
நீலகிரிக்கு செல்வதற்கான வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 
 
இ-பாஸ் பெறாத வாகனங்களின் அதிக அளவு இருப்பதால், நீலகிரியில் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுற்றுலா தலங்களைப் பார்வையிட முடியாமல் அவதியில் இருப்பதாகவும், மேலும், உள்ளூர் மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குப் போகும் வாகன எண்ணிக்கையை ஆராய்ச்சிக்காக உயர் நீதிமன்றம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் படி, வாரத்தில் 6000 வாகனங்களுக்கும், வார இறுதியில் 8000 வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று (ஏப்ரல் 1) முதல், நீலகிரிக்கு செல்லும் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட இ-பாஸ் பகல் 12 மணிக்கு முடிவடைந்ததால், இ-பாஸ் பெறாத வாகனங்களை திருப்பி அனுப்பும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!