1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. idumbavanam karthik comment agasint tvk vijay

சைக்கோ விஜய்க்கு பெண்கள் மீது அக்கறையா?!.. எல்லாம் அரசியல்!.. இடும்பாவனம் கார்த்திக் கோபம்!...

vijay
அப்துல் கலாமிடம் அரசியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் சமீபத்தில் youtube சேனல் உங்களுக்கு பேட்டி கொடுத்த போது ‘விஜயின் ரசிகர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள்.. ஒரு பெண் நாங்கள் விஜய்க்கு தங்கையாக இருக்கிறோம்.. அக்காவாக இருக்கிறோம்.. தேவைப்பட்டால் பொண்டாட்டியாக இருப்போம் என சொல்கிறார்., ஒரு பெண் ‘என் கணவரை விட எனக்கு விஜய்தான் முக்கியம்’ என்கிறார்.. இது விபச்சாரிகள் நிறைந்த தற்குறி கூட்டம்’ என்று பேசியிருந்தார்..

இதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.. மேலும் நேற்று இரவு டிஜிபி அலுவலகத்திற்கு  அவரே நேரில் சென்று பொன்ராஜ் மீது நடவடிக்கும்படி புகாரும் கொடுத்தார்.அதன்பின் நான் எல்லா பெண்களையும் பொதுவாக சொல்லவில்லை என பொன்ராஜ் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், நாம் தமிழர் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

விஜய்க்குப் பொண்டாட்டியா இருப்போம். என் கணவரைவிட விஜய்யைதான் புடிக்கும்.. என்று பேசிய பெண்களை வசைபாடினார் பொன்ராஜ். ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்களையும் அவ்வாறு கூறியதாக அரசியலுக்காக அதனைத் திரிக்கிறது தவெக.  ஒரு சில பெண்கள் என்றாலும் அவர்களைப் பேசியதும் தவறுதான். 'கும்பல் மனப்பான்மையில்' உணர்ச்சிவயப்பட்டுப் பேசியதற்காக அந்தப் பெண்களை அவ்வாறு பொன்ராஜ்  பேசியிருக்கக் கூடாது. அது ஒருபோதும் ஏற்புடையதல்ல. அதனைத் தாண்டிலும், பாலியல் தொழிலாளர்கள் என்பவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள். அவர்களைக் கொண்டு வசைபாடுவது  கண்டிக்கத்தக்கது.
idumbavanam

அதேசமயம், தவெகவின் இணையக்கூலிகள் Vulgar Warriors ஆக மாறி மாற்றுக்கட்சியினரை வசைபாடும் வேளையிலும், தனது மனைவி சங்கீதாவை இழித்துரைத்தபோதிலும் கண்டும் காணாது போன விஜய், யாருமே பார்க்காத ஒரு காணொளியில் பொன்ராஜ் பேசியதற்கு ஏன் இவ்வளவு பொங்கினார்? உண்மையிலேயே, அந்தப் பெண்கள் மீதான அக்கறையா இது?  "அவ்ளோ Worth இல்லை" எனக் கொச்சைப்படுத்தித் தனது மனைவியையே பேசிய விஜய்க்கு இப்போது எங்கிருந்து பெண்கள் மீது பரிவு வருகிறது? ஒரு மண்ணுமில்லை.

இதுவும் 100 விழுக்காடு அரசியல்தான்.  நடிகையோடு திருமண மேடையேறியதால் கடைக்கோடிவரை சேதாரமான தனது பிம்பத்தைத் தூக்கி நிறுத்த, 'பெண்களை இழிவாகப் பேசியதும் பொங்கிவிட்டார் விஜய்' என பெண்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை உருவாக்கவும், பெண்களிடம் இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்கவும் பொன்ராஜூக்கு எதிராக அறிக்கை, காவல்துறையிடம் புகார் என முழுக்க முழுக்க அரசியல் நாடகம்தான் நடத்துகிறது தவெக..

தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த ஒரு மாணவன் விபத்தில் சிக்கி இறந்துபோனான். அவன் சிகிச்சையில் இருந்தபோது மருத்துவச்செலவை ஏற்காத, இறந்தபிறகு, ஒரு இரங்கல் அறிக்கைகூட கொடுக்காத மனிதநேயமே இல்லாத ஒரு சைக்கோ விஜய்! இதுவரை 54 உயிர்கள் விஜய்யால் அல்லது விஜய்க்காக போயிருக்கிறது. ஒருவர் உடலுக்கும் இறுதி மரியாதையோ, அவர் குடும்பத்தினருக்கு வீட்டுச் சென்று ஆறுதலோ சொல்லாத குரூரமனம் கொண்ட ஆள் விஜய். அந்த விஜய்க்கு பெண்கள் மீது அக்கறையா? முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்ட நாடகம் இது!’ என பதிவிட்டிருக்கிறார்.

மேலும், பொன்ராஜை தாராளமாகக் கண்டிக்கட்டும்; நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கட்டும். உடன்படுகிறேன். அதுசரி! சங்கீதா விவாகரத்து மனு அளித்தபோது அவர் மீது தவெகவின் வக்கிரக்கும்பல் தனிமனிதத் தாக்குதலும், ஆபாச அர்ச்சனையும் செய்தபோது அவர்களைக் கட்டுப்படுத்தவோ, கண்டிக்கவோ செய்யாது அமைதிகாத்து, மாதர் அமைப்பு கண்டிக்கிற வரை சென்றதே அப்போது மூடிக்கொண்டு வாயை ஏன் இருந்தார் விஜய்?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
8வது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு.. எப்போது முதல் கிடைக்கும்?