தொடர்புடைய செய்திகள்
- இன்று 5 மாவட்டங்கள்.. நாளை 4 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: அடுத்த மூன்று நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை..!
- வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! கோவை, நீலகிரிக்கு காத்திருக்கும் கனமழை!
- இன்று காலை உருவாகியது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
கனமழை எதிரொலி.. இன்று ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை..
கனமழை காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இரவில் கனமழை பெய்யத் தொடங்கியதால், கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனை அடுத்து, இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 180 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இன்றும் அதே அளவு மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
