சட்டசபை நாலு நாளைக்கு லீவு!.. மீண்டும் 17ம் தேதி மானிய கோரிக்கை விவாதம்!...
கடந்த 7, 9, 11 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசினார்கள். திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் பதில் கூறினார்கள்.
மேலும், ஆகஸ்டு 13ம் தேதியான இன்று பொது பட்ஜெட் மற்றும் வேளான் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. நாளையும், நாளை மறுநாளும் சட்டசபை கூட்டம் இல்லை. 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
வருகிற 17ம் தேதி திங்கள் கிழமை மீண்டும் சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கவிருக்கிறது.
வருகிற 17ம் தேதி திங்கள் கிழமை மீண்டும் சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கவிருக்கிறது.
