1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (22:23 IST)

காக்கையை மீட்ட தீயணைப்பு துறைக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூரி!

யாரோ ஒருவர் பட்டம் விட்டதால் அந்த படத்தில் சிக்கி காகம் ஒன்று மாற்றிக் கொண்டதில்லை அந்த காகத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு அதுகுறித்து நடிகர் சூரி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
மரத்தில் சிக்கி ஒரு காகம் உயிருக்கு போராடுகிறது. முடிந்தால் உதவுங்கள் என்றுதான் சொன்னோம். சிறு உயிருக்கும் மதிப்பளித்து 2மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறைக்கு நன்றி. நல்லரசு! யாரோ விட்ட பட்டத்தால் விளைந்த துயர். பெருந்துயர் நிகழ்வதற்குள் பட்டம் விஷயத்தில் கவனம் காட்டுங்களேன்.
 
டுவிட்டர் பயனாளி ஒருவரின் மேற்கண்ட டுவிட்டுக்கு நடிகர் சூரி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்பதை உணர்ந்து, காகத்தின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு நன்றி...