வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (22:08 IST)

ஆட்சி எனக்கு, கட்சி உங்களுக்கு! சசிகலாவுக்கு தூதுவிட்டாரா ஈபிஎஸ்?

ஆட்சியை காப்பாற்ற பலவித முயற்சிகள் செய்து வரும் அதிமுக தலைமை கடைசியாக சசிகலாவிடமே சரண் அடைவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆட்சிக்கு நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை என்றால் அமமுகவின் ஆதரவை பெற்று ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், அதற்கு பதிலாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்கு வழங்கவும் தயார் என்று ஒரு உயரதிகாரி மூலம் ஈபிஎஸ் தூது விட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
ஆனால் இந்த சமாதானத்திற்கு சசிகலா எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லையாம். இப்போதைக்கு தினகரன் ஆலோசனையின்பேரில் நடக்கவே அவர் விரும்புகிறாராம். எனவே ஈபிஎஸ் சமாதான முயற்சி பலனளிக்காது என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்தால் மீண்டும் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.