1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (07:18 IST)

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் விண்ணப்பம் பெற குவிந்த மாணவர்கள்..!

நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நேற்று பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பொறியல் படிப்புக்கு விண்ணப்பம் பெற முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் குவிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
2024-25 ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
https://www.teneaonline.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலமும், இ சேவை மையங்கள் மூலமும் மாணவர்கள் நேற்று விண்ணப்பித்துள்ளனர். 
 
நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் கால அவகாசம் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியல் படிப்புக்கு மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva