தொடர்புடைய செய்திகள்
- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்..!
- சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!
- நாளை பிளஸ் 2 ரிசல்ட்.. நாளை முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம்..!
- சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!
- 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தி கருணாநிதி பாடம் அறிமுகம்.. 11 தலைப்புகளில் செய்த சாதனை..!
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. கடைசி தேதி என்ன?
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் அடுத்த கட்டமாக இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் பணியை தொடங்க உள்ளார்கள்.
ஏற்கனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம் தரப்படுவதாகவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தற்போது பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இன்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு செய்யலாம் என்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி தேதி வரை கால அவகாசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Mahendran
