தொடர்புடைய செய்திகள்
- 8 தொகுதிகள் சாதகமாக இல்லை.. முதல்வருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?
- ஓபிஎஸ் தொகுதியில் திமுக பிரச்சாரம் மந்தமா? அதிருப்தியில் இருக்கிறாரா ராஜ கண்ணப்பன்?
- ரூ.8250 கோடியை கொள்ளையடித்தது பாஜக தான் -அமைச்சர் மனோ தங்கராஜ்
- ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன்-கமல்ஹாசன்
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கொமதேக தலைவர் ஈஸ்வரன்..!
அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்
கூட்டணியில் இருந்து வெளியே வருவது போல் எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்து தேர்தலுக்குப் பின் மீண்டும் பாஜகவை ஆதரிப்பார் என்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை பாஜக அளித்துவரும் நிலையில் வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமரானால் அதிமுக என்ற கூட்டணி கட்சியை பாஜக அழித்துவிடும் என்றும் அதிமுக என்ற கட்சியை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
எனவே அதிமுக காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முதலில் பாஜக தோல்வி அடைய வேண்டும் என்றும், பாஜக தோல்வி அடைய வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva
