1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Duraimurugan says about megadhadhu dam

என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகும்: அமைச்சர் துரைமுருகன்

துரைமுருகன்
என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது அணை பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டமன்றத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்த தீர்மானம் ஒன்று என்று சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது அணை குறித்து பேசினார். அதன் பின்னர் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா போராடினார்கள். எடப்பாடி பழனிச்சாமி போராடினார். தற்போது மு க ஸ்டாலின் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை இந்த பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் .
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நான் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன்: இளவரசி