1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk spead images on camera used in karur

கரூரில் ஜனநாயகன் ஷூட்டிங் நடந்ததா?!.. வெளியான போட்டோ!.. உண்மை என்ன?...

karur vijay
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி நாமக்கல்,கரூர் போன்ற ஊர்களில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கும், கரூரில் மதியம் 12.30 மணிக்கும் விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டு அவரை பார்க்க மக்களும் கூடியிருந்தனர். ஆனால், விஜய் நாமக்கலுக்கு மதியம் 2 மணிக்குதான் சென்றார். அதேபோல், கரூருக்கு இரவு 7 மணிக்குதான் சென்றார். அப்போது அங்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.

விஜய் வேனின் மீது நின்று பேசிக்கொண்டிருந்தபோது மக்கள் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கீழே விழுந்து பலரும் மயக்கமடைந்தனர். அதில் பலரும் அங்கேயே உயிரிழந்தனர். அப்போது விஜய் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்னை சென்றுவிட்டார். மருத்துவமனையில் 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

karur

இது தொடர்பான விசாரணை சிபிஐ கைக்கு சென்றது. ஏற்கனவே கரூர் போலீஸ் அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் மற்றும் விஜயிடமும் மூன்று முறை சிபிஐ விசாரணை நடத்தியது.  3 முறையும் விஜய் டெல்லி சென்று விசாரணையில் கலந்துகொண்டார்.

camera

இந்நிலையில்தான், கரூரில் மக்கள் கூடிய கூட்டத்தை விஜய் நடித்து வந்த ஜனநாயகன் படத்தில் பயன்படுத்துவதற்காக சினிமா கேமராக்களை வைத்து படக்குழு படம் பிடித்ததாக திமுகவினர் பலரும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ அது சினிமா கேமரா இல்லை என்கிறார்கள், விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் இது நாமக்கல்லில் விஜய் சென்றபோது எடுக்கப்பட்டது என சொல்கிறார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை தவெக ஏற்கனவே மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, குமரி.. 5 தலைநகரங்கள்.. சட்டப்பேரவை சென்னையில் இல்லை.. சீமான் தேர்தல் அறிக்கை..