வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (11:13 IST)

உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் வழக்கு 5 ஆம் தேதி விசாரணை

வார்டு வரைமுறை பணிகளை முடிக்காமல்  உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக தொடுத்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே திமுக வார்டு வரைமுறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் திமுகவின் வழக்கை டிசம்பர் 5 ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.