1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. director rajumurugan comment about assembly live

சட்டசபை லைவ்!.. நாலைஞ்சி பாலையா படம் பார்த்த மாதிரி இருந்தது!.. இயக்குனர் நக்கல்!...

vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட்டார். தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்து 40 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாகவே சட்டசபை பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்தும், நக்கலடித்தும் பேசினார். அவரின் புகார்களுக்கு இன்று சட்டசபையில் பதில் சொன்ன முதல்வர் விஜய் திமுக எல்லா துறையிலும் ஊழல் செய்ததக கூறினார். டாஸ்மாக்கில் கட்சி நிதி என்கிற பெயரில் கொள்ளையடித்தனர் என அவர் சொல்ல கோபமடைந்த உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் ஆதாரம் இருந்தால் பேசக்கூடாது என எதிர்ப்பு  தெரிவித்தனர்.

அதன்பின் அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டனர். குறிப்பாக முதல்வர் விஜய் ‘அப்பாவை காணோம்’ என சொன்ன குட்டி கதை மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை போல செய்து காட்டிய மேனரிசம் தெல்லாம் திமுகவினருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, சமூக வலைதளின் அவர்கள் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஹபிபி திரைப்பட விழாவில் பேசிய இயக்குனர் ராஜு முருகன் ‘இன்று காலை முதல் சட்டசபை லைவ பார்த்து நாலஞ்சு பாலையா படம் பார்த்த மாதிரி ஹேங் ஒவர் ஆயிடுச்சி.. ஹபிபி போன்ற படத்தின் விழாவுக்கு என்னை கூப்பிட்டு அந்த ஹேங் ஓவரிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ எனக் கூறியிருக்கிறார்..