1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. direct interview for temple jos is cancelled by tvk

திருவண்ணாமலை கோவில் பணி!.. நேர்முக தேர்வு ரத்து!.. தவெக அமைச்சர் ரமேஷ் அதிரடி...

thiruvannamalai
தமிழகத்தில் தவெக அரசு அமைந்தவுடன் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வரும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு களையப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை, கோவில் நிர்வாகம், அறநிலை துறை, மின்சார துறை, அரசு மருத்துவமனைகள், குவாரிகள், சார் பதிவாளர் அலுவலகங்கள் என எல்லாவற்றிலும் நடக்கும் ஊழல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அரசு அதிகாரிகள் எதற்காகவும் யாரிடமும் லஞ்சம் வாங்க கூடாது என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். ஒரு பக்கம் அந்த துரை சார்ந்த அமைச்சர்களும் அவ்வப்போது எல்லா இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்..

அதன்படியே அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் பல கோயில்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பணம் வாங்கும் சிலரை கையும் களவுமாக பிடித்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தார்.

இந்நிலையில்தான் திருவண்ணாமலை கோயில் பணி தொடர்பாக திமுக ஆட்சியில் 109 பணியிடங்களுக்கு நடந்த நேர்முக தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் லஞ்சம் பெற்று தேர்வு செய்ததாக புகார் எழுந்தது. எனவே, மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி!.. பழனிச்சாமி அறிவிப்பு..