1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dharmapuri murder santosh video goes viral

அம்மாவையும் கொல்ல நினைச்சேன்!.. முடியல!.. திமுக பிரமுகர் வெளியிட்ட பகீர் வீடியோ!...

murder
தர்மபுரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் சந்தோஷ்(45). இவர் தனது மனைவி சரண்யா மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் சாத்விகா இருவரையும் கொலை செய்து விட்டு தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் லாரி விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. மகளை சுத்தியால் அடித்தும், மனைவியை கழுத்தை நெறித்தும் அவர் கொலை செய்திருக்கிறார்.

விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாகவே இது நடந்திருக்கலாம் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் சந்தோஷ் பைக்கில் சென்றபடியே ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அதில் ‘எனக்கு நிறைய கடன் ஆகிவிட்டது. சமாளிக்க முடியவில்லை.. எனவே குடும்பத்தோடு சாவது என்கின்ற முடிவை எடுத்து விட்டேன்.. என் மனைவி, மகளை கொன்று விட்டேன்.. அம்மாவையும் கொல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன்..

ஆனால் மிகவும் டயர்ட் ஆகிவிட்டது.. எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். இன்னும் சில நிமிடங்களில் நானும் தற்கொலை செய்து கொள்வேன்.. யாரும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யாதீர்கள்.. கடன் வாங்காதீர்கள்’ என்று அவர் அதில் பேசியிருக்கிறார். மேலும் தன் மனைவியின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை யாரிடமெல்லாம் கொடுக்க வேண்டும் என சொல்லி அவர்களின் பெயரையும் சந்தோஷ் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.