தொடர்புடைய செய்திகள்
- 80 சீட்!.. துணை முதல்வர் பதவி!.. விஜயிடம் டீல் பேசுகிறதா என்.டி.ஏ கூட்டணி?...
- ஓட்டு வரும்.. சீட்டு வராது!. என்.டி.ஏ கூட்டணிக்கு போங்க!.. விஜய்க்கு அட்வைஸ்!...
- எடப்பாடி பழனிச்சாமிக்கு ஷாக் கொடுக்கும் பாஜக!.. தொகுதி பங்கீட்டில் இழுபறி!..
- எங்களுக்கு சீட் இல்லனாலும் பரவால்ல!.. தவெக மீட்டிங்கில் நிர்வாகிகள் சொன்னது என்ன?..
- திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. வாங்க பார்ப்போம்!..
எனக்கு நயன்தாரா வேணும்!. கனவை நிறைவேத்துவாரா ஸ்டாலின்?.. சர்ச்சையில் சிக்கிய சிவி சண்முகம்!..
சமீபகாலமாக அரசியல் பிரமுகர்கள் நடிகைகள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகி விட்டது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜயை நடிகை திரிஷாவோடு இணைத்து பேசி கடுமையான எதிர்ப்பை பெற்றார். அதன்பின் வருத்தமும் தெரிவித்தார்.
இந்நிலையில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது சர்ச்சையாகிவிட்டது. இன்று நடந்த அதிமுக போராட்டத்தில் பேசிய சிவி சண்முகம் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை நிறைவேற்றுகிறேன்.. உங்கள் கனவை சொல்லுங்கள் என சொல்கிறார்..
எனக்கு நயன்தாரா வேணும்.. அதை அவர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை எனக்கு கல்யாணம் பண்ணிவை என்று ஒருத்தன் வருவான்.. அது நிறைவேற்றுவாரா?.. என நக்கலாக பேசினார். அதுவும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒரு போராட்டத்தில் சண்முகம் இப்படி பேசியதை எதிர்ப்பை பெற்றது.
இதையடுத்து சண்முகத்தின் பேச்சுக்கு பலரும் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.. இந்நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள சண்முகம் நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டு விட்டது.. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.. முற்றிலும் தவறுதலாகவே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுவிட்டது. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியிருக்கிறார்.
இந்நிலையில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது சர்ச்சையாகிவிட்டது. இன்று நடந்த அதிமுக போராட்டத்தில் பேசிய சிவி சண்முகம் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை நிறைவேற்றுகிறேன்.. உங்கள் கனவை சொல்லுங்கள் என சொல்கிறார்..
எனக்கு நயன்தாரா வேணும்.. அதை அவர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை எனக்கு கல்யாணம் பண்ணிவை என்று ஒருத்தன் வருவான்.. அது நிறைவேற்றுவாரா?.. என நக்கலாக பேசினார். அதுவும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஒரு போராட்டத்தில் சண்முகம் இப்படி பேசியதை எதிர்ப்பை பெற்றது.
