1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:30 IST)

கவுன்சிலர்கள் கணவர்கள் தலையிட்டால் நடவடிக்கை – மேயர் பிரியா எச்சரிக்கை

சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று 14 மா நகராட்சிகளையும் கைப்பற்றியது.

இந்நிலையில், கவுன்சிலராக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கணவர்கள் தலையீடு இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இதுகுறித்து சென்னை திமுக மேயர் பிரியா கூறியுள்ளதாவது:

கவுன்சிலராக யார் தேர்வு செய்யப்பட்டாரோ அவர் தான் அந்தப்  பணியைச் செய்ய வேண்டும். அதில் பிறரது தலையீடு இருந்தால் தலைமையிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.