1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (20:11 IST)

பாஜக 3 வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது- அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக 3 வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியாக திமுக பெரும்பானையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 22 மா நகராட்சி வார்டுகள்,  நகராட்சியில் 56 வார்டுகள் பேரூராட்சியில் சுமார் 230 வார்டுகளை   தற்போது வரை பாஜக கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே, தமிழகத்தில் பாஜக 3 வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில், அடுத்ததாக இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.