1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai and Sengottai train from today

மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!

மதுரை
மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!
மீண்டும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை - செங்கோட்டை இடையே இயங்கிவந்த முன்பதிவில்லா பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
 
 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் இன்று முதல் தினமும் இரண்டு முறை மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் வைத்து மாலை அணிவித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
 
 
அடுத்த கட்டுரையில்
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சிறை; புதுமண ஜோடியின் பரிதாபம்