தொடர்புடைய செய்திகள்
- வணக்கம் சொன்னால் ஏமாந்துவிடுவார்களா தமிழர்கள்? முக ஸ்டாலின் ஆவேசம்
- உபி முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
- ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, நிவாரண நிதி எங்கே? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியா? முதல்வர் ஆலோசனை!
- உபி கேரளாவாக மாறினால் நல்லதுதான்: யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி!
முதல்வர், கவர்னர் ஒருவரை ஒருவரை பாராட்டும் புதுவை அரசியல்!
முதல்வர், கவர்னர் ஒருவரை ஒருவரை பாராட்டும் புதுவை அரசியல்!
தமிழகத்தில் முதல்வர் மற்றும் கவர்னர் ஆகிய இருவரும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய பிறகு இந்த மோதல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிட தக்கது
ஆனால் அண்டை மாநிலமான புதுவையில் முதல்வர் மற்றும் கவர்னர் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டு வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
புதுச்சேரி வளர்ச்சியடைந்த மாநிலமாக வளர்கிறது என்றும் முதல்வரின் அதிரடி திட்டங்களை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஆளுனர் தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான உரிமை எந்த விதத்திலும் புதுச்சேரியில் மறுக்கப் படாது மறைக்கவும் படாது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி கூறியுள்ளார்
அதேபோல் முதல்வர் பேசியபோது புதுவை அரசுக்கு துணை நிலை ஆளுநர் பல்வேறு விதங்களில் உதவியாகவும் உறுதுணையாகவும் இருக்கிறார் என்றும் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
முதல்வர் மற்றும் கவர்னர் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
