தொடர்புடைய செய்திகள்
- திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியா? முதல்வர் ஆலோசனை!
- இந்தியா முழுவதும் 3வது டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு தகவல்
- அரசு பணியாளர்கள் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? – மத்திய அமைச்சர் பதில்!
- உபி கேரளாவாக மாறினால் நல்லதுதான்: யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி!
- தினமும் பொய் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்!
ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, நிவாரண நிதி எங்கே? பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வரவில்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் மேலும் கூறியதாவது:
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வேண்டி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்; இதுவரை அந்த நிதி வரவில்லை; எப்போது வருமென்றும் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள்.
ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும், பேரிடர் நிவாரண நிதியும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் எங்கே? இதுக்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது; ஆனா, வணக்கம்னு சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நினைக்கிறீங்க. தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.
அடுத்த கட்டுரையில்
