ஜப்பான் சுற்றுலா பயணியின் புகார்.. ஒருசில மணி நேரங்களில் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி.. இதுதான் தவெக ஆட்சி...!
ஜப்பானிய சுற்றுலா பயணி ஒருவர், தமிழகத்தின் அழகான கோயில் ஒன்றின் மீது குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்டு வேதனை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஒரு வெளிநாட்டவர் நம் நாட்டின் சுகாதார சீர்கேட்டைச் சுட்டிக்காட்டியது பலரது கவனத்தை ஈர்த்தது. .
அந்த ஜப்பானிய பயணி பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே, சென்னை மாநகராட்சி உடனடியாக செயல்பட்டு அந்த பகுதியில் இருந்த குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்தது. தனது புகாருக்கு இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை கண்டு அந்த பயணி ஆச்சரியமும் நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த துரித நடவடிக்கை தவெக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்திறனை வெளிப்படுத்துகிறது.
தூய்மையான தமிழகத்தை உருவாக்குவது அரசின் கடமை மட்டுமல்ல, அது பொதுமக்களின் பங்களிப்புடனும் சாத்தியமாகும். வெளிநாட்டவர் சுட்டிக்காட்டும் வரை நாம் பொறுப்புணர்வோடு இருக்கக்கூடாதா என்ற கேள்வி இச்சம்பவம் மூலம் எழுகிறது.
இனிவரும் காலங்களில், நம் பாரம்பரிய இடங்களையும் பொது இடங்களையும் குப்பை இல்லாத இடங்களாக பராமரிக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். நிர்வாகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஒவ்வொரு குடிமகனும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே முழுமையான தூய்மை சாத்தியமாகும்.
Edited by Siva
