1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:28 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டி: திடீரென மயக்கமடைந்த ஸ்பெயின் நாட்டு பெண் நடுவர்!

Chess
செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென ஸ்பெயின் நாட்டின் நடுவர் ஒருவர் மயக்கமடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை அருகே மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த விளையாட்டு போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டிலிருந்து நடுவராக வந்திருந்த பெர்னாண்டஸ் என்ற பெண் நடுவர் இன்று போட்டி நடைபெறும் இடத்திற்கு காலை வந்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்தார்
 
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர் மயக்கமடைந்தார் என கூறப் பட்டது இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது மயக்கமடைந்த நடுவர் நலமாக இருப்பதாகவும் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி தகவல்கள் வெளியாகியுள்ளன