1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (19:15 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணிக்கு 2 வெற்றி!

chess
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ஏற்கனவே இந்திய அணியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்திய அணிக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில், ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய வீராங்கனைகள் இருவர் வெற்றி. இந்தியா சி பிரிவில் விளையாடிய ஈஷா கர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்!
 
அதேபோல் தமிழ்நாடு  வீரர்கள் முரளி, அபிஜித் வெற்றி பெற்றுள்ளனர்! ஓபன் சி பிரிவில் தெற்கு சூடான் அணி வீரர் அஜேக்கை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். 
 
அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.