1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological says about rain

இன்னும் சிலமணி நேரங்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

rain
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: வியாபாரிகள் அறிவிப்பு!