1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:00 IST)

முன்னாள் அமைச்சர் வங்கி லாக்கரில் சோதனை

அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர்  வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தச் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோடி அதிமுக முன்னாள் அமைச்சர ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசு கேவிய்ட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதேபோல், கோவை குனியமுத்தூரில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் லாக்கரை நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.