1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chanakya channel hacked

24 மணி நேரத்தில் மீண்டது ரங்கராஜ் பாண்டேவின் ‘சாணக்யா’ சேனல்!

‘சாணக்யா’
பிரபல பத்திரிகையாளர் மற்றும் பேச்சாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் ‘சாணக்யா’ என்ற யூடியூப் சேனலில் பிரபலங்களின் பேட்டிகள் மற்றும் அரசியல் கருத்துக்கள் ஒளிபரப்பாகும் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று திடீரென இந்த சேனல் முடங்கி விட்டதாகவும் ஹேக்கர்கள் ஹேக் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை ரங்கராஜ் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்
 
ஆனால் ஒரு சிலர் யூடியூப் நிர்வாகம் தான் இந்த சேனலை முடக்கியுள்ளது என்று வதந்தியை பரப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சாணக்கியா சேனல் மீண்டு விட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது
 
24 மணி நேரத்தில் ‘சாணக்யா’ சேனல் ஹேக்கர்களிடம் இருந்து மீண்டு விட்டதாக பாஜகவினர் தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் யூடியூப் நிந்ர்வாகம் ‘சாணக்யா’  சேனலை முடக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விடைபெறாமல் சென்றதற்காக மன்னியுங்கள்: தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்!