1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:36 IST)

’வாட்ஸ் ஆப்’ பார்த்துக்கொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிப்பவர்  மூக்கையா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பேருந்து ஓட்டிச்செல்லும் போது வாட்ஸ் அப்பை இயக்கியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இவரை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட அரசு போக்குவரத்து கழக மேலாலர் ஆறுமுகம் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வசிப்பவர்  மூக்கையா.இவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ்ஸை ஓட்டிச்சென்றார். பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள்  இருந்தனர்.
 
இந்நிலையில் அவர் செல்பொனில் வாட்ஸ் ஆப் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. அப்போது பயணி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலானது.
 
இந்த வீடியோவை பார்த்த மக்கள், பயணிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து மூக்கையாவை, அரசு போக்குவரத்து அதிகாரி ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுபோன்று செயலில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.