தொடர்புடைய செய்திகள்
- ஆக்ஸிஜன் கேட்டு கதறியவரை அடிப்பதாக மிரட்டிய பாஜக அமைச்சர்!
- ஆக்சிஜன் இல்லாமல் பறிபோகும் உயிர்கள்... டெல்லியின் கொடூர நிலை!
- பிரபல தமிழ் நடிகருக்கு தேசிய விருது...ரசிகர்கள் வாழ்த்து மழை
- ஆக்ஸிஜன் வண்டியை மறைக்காதீங்க – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
- ஓடிப்போ கொரோனா சனியனே..! – தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஓடிய கிராம மக்கள்!
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் கொடுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!
டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் வாகனங்களை மாநில அரசுகள் தடுத்து நிறுத்தியதால் ஆக்ஸிஜன் சப்ளையை ராணுவத்திடம் ஒப்படைக்க அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மாநில அரசுகள் டெல்லி சென்ற ஆக்ஸிஜன் வாகனங்களை தடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் காணொலி கூட்டத்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆக்ஸிஜன் தடைப்படாமல் கிடைக்க ஆக்ஸிஜன் ஆலைகள் மற்றும் விநியோகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
