வாக்குப்பதிவிற்கு முன்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க போடப்படும் மாதிரி வாக்குகளை பல பூத்களில் அழிக்காமல் விட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மீது புகார் எழுந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தின் பலக் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளைக் கட்டம் கட்டி தேர்தல் ஆணையம் செய்த சோதனைகளே. வாக்குப்பதிவு நாளன்று பல பூத்களில் வாக்கு எந்திரங்கள்...