தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!
- 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பதில்..!
- கவர்னரை சந்தித்து மனு அளித்த அண்ணாமலை.. விஷச்சாராய மரணம் குறித்து விசாரணையா?
- என்னிடம் ரூ.2,000 நோட்டு இல்லை, திமுகவுக்குதான் பாதிப்பு: அண்ணாமலை
- ரூ.2000 நோட்டை வாங்கி கொள்ளுங்கள்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தல்..!
'தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்..!
தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
நேற்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகளை திறக்க பாரதிய ஜனதா ஆதரவு தருவதாக கூறினார்
டாஸ்மாக் வருமானத்தை குறைத்து அதே வருமானத்தை வேறு எப்படி ஈட்ட முடியும் என பதினைந்து நாட்களில் பாஜக சார்பில் தமிழக அரசுக்கு வெள்ளை அறிக்கை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva
