1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After three suicide, Neet held today

3 உயிர்பலிகளுக்கு பின் இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு:

நீட் தேர்வு
தமிழகத்தில் நீட் தேர்வு பயம் காரணமாக நேற்று 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது 
 
நேற்று ஒரே நாளில் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் முருகேசன் ஆகிய மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர் 
 
இந்த தற்கொலையின் பரபரப்பு தமிழகத்தில் இன்னும் நீங்காத நிலையில் இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர் 
 
அதேபோல் இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தைரியமாக எழுத வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் தேர்வில் வெற்றி தோல்வி என்பது வாழ்க்கை
About Writer
siva