1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After summer holiday schools open date announcement

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

school student
கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பை புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
தமிழகம் போலவே புதுவையிலும் 10, 11, 12 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஒன்று முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது. 
 
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 29 முதல் கோடை விடுமுறை என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கத்தை பொருத்து பள்ளிகள் திறகும் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையும் விரைவில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தாமரை கண்டிப்பாக மலரும்.. வாக்களித்த பின் கீர்த்தி சுரேஷ் அம்மா பேட்டி..!