1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actress trisha attened tn independence day

சென்னை சுதந்திர தின விழாவில் திரிஷா!

trisha vijay
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் முதல்முறையாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தேசிய கொடி ஏற்றினார்.

இதைத்தொடர்ந்து அவர் மக்களிடமும் உரையாற்றினார். இந்த விழாவில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தின்ர். அதை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

அதேபோல் சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் பணியாளர் ஆகியோரும் கொடுத்த அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றுக்கொண்டார்., இந்த விழாவில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டார். முதல்வர் விஜயின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா ஆகியோரின் அருகில் திரிஷ அமர்ந்திருந்தார்.

இது ஒரு அரசு விழா.. இந்த விழாவில் திரிஷாவுக்கு என்ன வேலை? அவர் எதற்காக இதில் கலந்து கொள்கிறார்? என திமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் சமூகவாலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அரசு விழாக்களில் திரிஷா கலந்து கொள்வது விஜயின் இமேஜுக்கு நெகட்டிவ்வாக அமைந்தாலும் அது தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது..


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்!.. 5 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரிப்பு!...